![தமிழ் சினிமாவில் புதிய ஸ்டைலை உருவாக்கிய கௌதம் மேனன்! ஸ்பெஷல் - Cineulagam](http://cinema.zoftcdn.com/photos/thumbs/tamil/directors/gauthamvasudevmenon/002.jpg)
காதல் வந்தவுடன் எல்லோரும் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள், ஆனால், ஒரு கவிதையையே காதலாக திரையில் காட்டி நம்மை உருக வைப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் அவர்களிடன் உதவி இயக்குனராக பண்புரிந்தார்.
பின் தனக்குள் ஒரு கான்பிடன்ஸ் வந்தவுடன் மாதவன் நடிப்பில் மின்னலே என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. குறிப்பாக இளம் காதலர்களை மிகவும் ஈர்த்தது. இவை அனைத்திற்கும் காரணம் நம் வாழ்க்கையில் பார்த்த அழகான காதலை தன் ஸ்கிரீனில் கொண்டு வந்திருப்பார் கௌதம்.
ஆடியன்ஸ்களை ஏ,பி,சி என பிரித்தால் எப்போதும் கௌதம் இருக்கும் இடம் ஏ செண்டர் தான். மிகவும் அழகான காட்சி அமைப்புகள், அளவான பேச்சு, அதிகமான ஆங்கில வார்த்தைகள் இது தான் கௌதம் ஸ்டைல். ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துடம் ஹிட் வரிசை தான்.
மணிரத்னத்திற்கு பிறகு நாம் வாழ்ந்த பகுதியை மிகவும் அழகாக காட்டுபவர் கௌதம் மட்டுமே, இதை மணிரத்னம் அவர்களுடைய மனைவி மற்றும் நடிகை சுஹாசினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். காதல் மட்டும் இல்லை எனக்கு ஆக்ஷனும் வரும் என்று இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் இன்றும் ஆக்ஷன் படங்களுக்கு ஒரு ட்ரண்ட் செட்டிங் தான்.
இவர் படங்கள் என்றாலே கேமராவில் தான் கதாநாயகிகள் அனைவரும் இத்தனை அழகாக தெரிகிறார்கள். அவர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் கௌதம் கண் வழியாக நாம் அந்த படங்களை பார்ப்பதால் தான் இவ்வளவு அழகாக தெரிகிறார்களோ என்னமோ?, அதிலும் குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை இன்றும் பலர் ஜெஸ்ஸியாக காதலித்து தான் இருக்கின்றனர்.
இந்த பிறந்த நாள் கௌதம் மேனன் அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் தன் ஆதர்ஸ நாயகன் அஜித்துடன் 10 வருடங்களாக வேலை பார்க்க வேண்டும் என்று எண்ணி, தற்போது என்னை அறிந்தாலில் அந்த கனவு பலித்து விட்டது.
0 comments:
Post a Comment