
இந்திய அணி உலகக்கிண்ண போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
2–வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர், ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த சச்சின், இந்திய அணி சிறப்பான அடித்தளத்தை அமைத்துள்ளது.
2 வெற்றிகளை பெற்றதன் மூலம் அணி பிரகாசமாக திகழ்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் நான் இந்திய அணி மீது முழு திருப்தி அடையவில்லை, தொடர்ந்து இது மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சிறப்பாக இருக்கும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.
2 ஆட்டத்தில் துடுப்பாட்டம் நன்றாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் இன்னும் நன்றாக அமைய வேண்டும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.