↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விராத் கோஹ்லி தற்போதுள்ள இந்திய அணியில் உள்ள வீரர்களை விட சிறந்தவர் தான். ஆனால் அவரை ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பாரி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பாரி ரிச்சர்ட்ஸ் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வரும் டோணி தலைமையிலான இந்திய அணி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவானான அவர் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் பற்றி பேசியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,
தற்போதுள்ள இந்திய அணியில் விராட் கோஹ்லி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் மிகவும் திறமையானவர் தான். ஏபி டி வில்லயர்ஸ், கோஹ்லி ஆகியோர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆவர்.

அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் கோஹ்லி அளவுக்கு இல்லை. கோஹ்லி ஒரு இன்னிங்க்ஸை அழகாக பில்ட் அப் செய்வார். அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார்.

கோஹ்லி சிறந்த ஆட்டக்காரர் தான். ஆனால் அவரை ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருடன் எல்லாம் ஒப்பிட முடியாது. சச்சின் பந்தை அடிக்கும் விதமே தனி. கோஹ்லி இன்னும் நிறைய கற்க வேண்டி உள்ளது.

தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் டேல் ஸ்டெய்ன் மிகச் சிறப்பாக விளைாடுகிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். தரம் குறைந்துவிட்டாலும் சில நல்ல பந்துவீச்சாளர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்றார் ரிச்சர்ட்ஸ்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top