↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தினேஷ், விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் மீண்டும் மகிந்தவின் அவதாரத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று அக்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அநாதைகளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் ராஜபக்சவின் நிழலையாவது கொண்டு வந்து கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.

உதயகம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் புதிய கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ராஜபக்சவின் அவதாரத்தை கொண்டுவருவதற்கு பாரிய முயற்சி ஒன்றினை மேற்கொள்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top