↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளிடமும் தோல்வியை தழுவியது. அணியின் இந்த மோசமான அடுத்தடுத்த தோல்வி ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அணியுடன் தங்கி இருந்த தெரிவு குழு தலைவரான முன்னாள் வீரர் மொயின்கான் சூதாட்ட கிளப்புக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவர் நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் திரும்பிய மொயின்கான் கராச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள்,‘‘கிரிக்கெட்டுக்கு மொயின்கான் எதிரி, அவரை வெளியேற்று என கோஷமிட்ட ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் யாரையும் சந்திக்காமல் வேறு வழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த முட்டைகளை தங்களது தலையிலேயே உடைத்து எதிர்ப்பை வெளிகாட்டினர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top