↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்றுசிறுவர்களை இளையதளபதி விஜய் சமீபத்தில் சந்தித்து அவர்கள் மூவரும் கூடிய விரைவில் குணமாக நேரில் வாழ்த்தினார் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில் விஜய்யின் வாழ்த்து பலித்து, தற்போது மூன்று சிறுவர்களும் புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மேக் ஏவிஷ் என்ற தனியார் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியபோது, 'புற்று நோயால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இதை அறிந்து கொண்ட விஜய், நேரில் சிறுவர்களை சந்தித்து அவர்கள் தங்கள் நோயில் இருந்து முற்றிலும் குணமடைய வாழ்த்தினார். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அவர்களுடைய ஆசையையும் பூர்த்தி செய்து வைத்தார்.

புற்று நோய் பாதித்த சிறுவர்களை விஜய் சந்தித்த பின்னர் மூவரும் மிகச்சிறந்த மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளனர். மற்றவர்களை போல இனி அவர்கள் தங்கள் வாழ்க்கையை இயல்பாக வாழமுடியும்' என்று கூறியுள்ளார்.

மூன்று சிறுவர்களும் புற்று நோயில் இருந்து மீண்ட செய்தி கேட்டு விஜய் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top