↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா, கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்து திரையுலகில் இருந்து விலகினார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜெனிலியாவிடம் செய்தியாளர்கள் அணுகி மீண்டும் நடிக்க வருவீர்களா? என்று கேட்டனர். இதற்கு பதில் கூறிய நடிகை ஜெனிலியா, 'தான் திரையுலகில் இருந்து விலகியதாக என்றுமே நினைத்ததில்லை என்றும், தற்காலிகமாக நடிப்பதை நிறுத்திவைத்துள்ளதாகவும் கூறிய அவர் மீண்டும் நடிக்க வருவதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை' என்று கூறியுள்ளார்.

நடிப்பை தான் மிகவும் நேசிப்பதாகவும், தனக்குரிய கேரக்டர் அமைந்தால் மீண்டும் ரீ எண்ட்ரி ஆக தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஜெனிலியாவின் இந்த பேட்டி காரணமாக அவர் மீண்டும் பாலிவுட் அல்லது கோலிவுட் திரையுலகில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்புபோல கதாநாயகி வேடம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top