↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
டெல்லியில் ராணுவ வீரர் ஒருவரின் மனைவியை பலாத்காரம் செய்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பணிபுரியும் ராணுவ வீரர் ஒருவரின் 25 வயது மனைவிக்கு பியூட்டி பார்லரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 20ம் திகதி டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை டெல்லி விபச்சாரத்தில் தள்ளிவிட்டதோடு, கடந்த வியாழக்கிழமை இரவு டெல்லி ஹவ்ஸ் காஸ் பகுதியில் வசிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மெஹர் தேஸின்(27) என்ற மருத்துவர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் பொலிசாரை கைபேசியில் தொடர்பு கொண்டு, தனது பெண் பயணி ஒருவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி அழுவதாக தெரிவித்தார்.

பொலிசார் அந்த பெண்ணிடம் விசாரித்து வழக்குப்பதிவு செய்து மருத்துவர் மெஹர், அந்த பெண்ணை டெல்லிக்கு அழைத்து வந்த சுமன்(37), அவரது கணவர் தீபக்(40), அவர்களின் உதவியாளர்கள் தரம்வீர்(32), கமல்(31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அந்த மருத்துவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவர் கூறுகையில், பாலியல் புரோக்கரிடம் பணத்திற்கு யாராவது பெண்ணை அழைத்து வரகேட்டேன். அவர் ரூ.9 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், அந்த பெண் இரவு முழுவதும் த‌ன் வீட்டில் இருந்ததாகவும், விருப்பப்பட்டு தான் த‌ன்னுடன் உறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top