தமிழ் சினிமாவில் பெண் கவிஞர் என்றால் நாம் அனைவருக்கும் நியாபகம் வருபவர் தாமரை.
இயக்குனர் சீமானால் இனியவளே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தாமரை கௌதம் மேனனின் மின்னலே படம் தொடங்கி என்னை அறிந்தால் வரை அனைத்து படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் தாமரையின் கணவர் சில மாதங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில், தன்னையும், தன் மகனையும் தவிக்கவிட்டு சென்ற தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி தாமரை திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை, சூளைமேடு பெரியார் பாதை அருகே தாமரை திடீர் தர்ணா போராட்டம் செய்து வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.