அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்தது.
இதைத் தொடர்ந்து உலகக்கிண்ணத் தொடரில் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி தொடர் வெற்றியை பெற்றது.
இது குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், இந்திய அணியில் உள்ள ஒவ்வொருவரும், மற்றவர்களின் திறமை மீது வைத்து இருக்கும் நம்பிக்கை தான் வெற்றிக்கு காரணமாக நினைக்கிறேன்.
மற்றவர்கள் எங்களை பற்றி என்ன பேசினாலும் அதை பற்றி கவலைப்படாமல் அணியில் உள்ள வீரர்கள் 15 பேர் மட்டுமின்றி, அணியின் உதவியாளர்கள் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
நாங்கள் சரிவில் இருந்து வலுவாக மீண்டு வருவதற்கு இது தான் காரணமாகும். மற்றபடி மந்திரம் எதுவும் எங்களிடம் இல்லை. நம்பிக்கையுடன் போராடினால் சரிவில் இருந்து நல்ல நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.