↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கிய கவுதம் மேனன், தற்போது சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சிம்பு நடிப்பில் 'விண்ணை தாண்டி வருவாயோ' என்ற மறக்க முடியாத ரொமாண்டிக் கதையம்சம் உள்ள படத்தை கொடுத்த கவுதம் மேன, இந்த படத்தை ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் கலந்து கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் முதல் பாதியில் சிம்புவின் அற்புதமான காதல் காட்சிகளும், இரண்டாவது பாதியில் சிம்புவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அமைந்திருப்பதாகவும், இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு, பல்லவி சுபாஷ், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். 'என்னை அறிந்தால்' ஒளிப்பதிவாளர் டான் மெக்ரதூர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பாளராக அந்தோணி பணிபுரிகின்றார். இந்த படம் இவ்வருட இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top