↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி பனாஜி: கோவா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஷாப்பிங் செய்கையில் பிரபல கடை ஒன்றின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை கண்டுபிடித்தார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் விடுமுறையை கழிக்க வருகிறார். கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள கன்டோலிம் நகருக்கு சென்ற அவர் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவர் அந்த நகரில் உள்ள பிரபல துணிக் கடையான ஃபேப்இந்தியா கடைக்கு சென்றார். அந்த கடையில் ஆடை வாங்கிய அவர் அதை அணிந்து பார்க்க அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றார்.


அப்போது அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை அவர் கண்டுபிடித்தார். கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து உடனே உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் அளித்தார்.

உடனே மைக்கேல் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் ஸ்மிருதி இரானியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் பிரபல ஆடைக் கடையின் உடைமாற்றும் அறையில் செல்போனில் வீடியோ ஆன் செய்து வைத்திருந்ததை இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த அறையில் செல்போனை மறைத்து வைத்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top