↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
shruti1-600x300
தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் ஸ்ருதி படத்தில் நடிக்கவில்லை என்று பல வதந்திகள் பரவிவருகின்றன. இந்நிலையில் “புலி” படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் எங்களது தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து வரும் “புலி” படத்தில்தான் ஸ்ருதிஹாசன் ஏப்ரல்1 முதல் 15 வரை நடிக்கவுள்ளார். தற்பொழுது தலக்கோணம் சுற்றுலா தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
ஏரியும் காடும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்ட செட் உருவாக்கி படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவார்கள் அதனால் செட்டையும் பிரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை புரிந்துகொண்ட ஸ்ருதி ‘புலி’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர் ‘புலி’ படத்தை பொருத்தமட்டில் சொன்ன தேதியில் கரெக்டாக படப்பிடிப்புக்கு வருவதும், அர்ப்பணிப்போடு அவர் நடிப்பதையும் ஒட்டுமொத்த யூனிட்டே பாராட்டி வருகிறது. எனவே ஸ்ருதி சார்ந்த எந்த விதமான வதந்திகளையும் பரப்பவேண்டாம். என்று புலி தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்திலும், இந்தியில் அக்ஷய்குமாருடன் ‘கப்பர்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு’ படத்திலும் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top