சிறந்த நடிப்பாலும், அசத்தலான நடனத்தாலும் 80களில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினால் திருமணத்திற்கு பிறகும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது சிம்ரன், 'சிம்ரன் அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் லோகோவையும் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், நான் சினிமாவில் நடித்த அனுபவமும், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவமும் தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க உறுதுணையாய் இருந்தது.
சினிமா மீது இருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும், இயக்கவும் வைத்துள்ளது. இவ்வருடம் இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.