
மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களை இயக்கிய கவுதம் மேனன், தனது படங்களில் ஹீரோயின்களை காதல் காட்சிகளில் பயன்படுத்துவது பற்றி விளக்கினார். இது பற்றி அவர் கூறியது:நிஜ வாழ்க்கையிலிருந்து நிறைய சம்பவங்களை நான் படங்களில் கொண்டுவருவதில்லை, காரணம் அதெல்லாமே பர்சனல் விஷயங்கள். ஆனால் எங்கோ ஒரு புள்ளியில் அது எனக்குள் பிரதிபலிக்கும். அதைத்தான் எனது கதாபாத்திரங்களில் கொண்டு வருகிறேன். பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறேன், திரையில் அவர்கள் எப்படி காட்டப்பட வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்துகொள்கிறேன். மின்னலேவில் ரீமா சென் தொடங்கி என்னை அறிந்தால் படத்தில் திரிஷா, அனுஷ்கா வரை அப்படித்தான் காட்டி இருக்கிறேன். இவர்களில் யார் பெஸ்ட் என கேட்டால் எல்லோருமே எனது கதாபாத்திரங்கள். எல்லோருமே பெஸ்ட் என்பேன். இதிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான முறையில் பெண் கதாபாத்திரத்தை காட்டுவதாக இருந்தாலும் அதுவும் அன்பானதாகவும், மதிப்புமிக்கதாகவுமே இருக்கும். காதல் என்பது திரையில் பார்க்கும் காட்சிகள்தான் என்பது என் கருத்து.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.