↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்கள் முன்னணி ஹீரோக்களாக இருந்தபோது, பத்திரிகையாளர்களுடன் நல்ல நட்பையும் கொண்டிருந்தனர்.
அதன் காரணமாக பிரஸ் ஷோ என்று சொல்லப்படும் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு தவறாமல் வருகை தருவார்கள். படம் பற்றிய கருத்தை கேட்டறிவார்கள்.
இன்றைய தலைமுறை நடிகர்களிடம் இந்தப் பழக்கம் இல்லாமலே போய்விட்டது.
இந்நிலையில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நேற்று நடைபெற்றது.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமா பத்திரிகையாளர்களிடமிருந்து விலகிப்போய்விட்ட விஜயகாந்த், சகாப்தம் படக்காட்சிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.
பழைய ‘விஜி’யாக சீனியர் பத்திரிகையாளர்களுடன் நட்புடன் உரையாடிய விஜயகாந்த், பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து சகாப்தம் படத்தைப் பார்த்தார்.
படம் முடிந்து பத்திரிகையாளர்களிடம் பேச விரும்பிய விஜயகாந்ததை ஆர்வக்கோளாறு ஆசாமிகள் கடுப்பாக்கிவிட்டனர்.
விஜயகாந்தை போட்டோ எடுக்கவும், பைட் எடுக்கவும் கூடியவர்கள் விஜயகாந்தின் காலை மிதித்துவிட்டனர்.
சகாப்தம் பற்றி பேச வந்த விஜயகாந்த் உங்க சங்காத்தமே வேணாமப்பா என்று காரில் ஏறி போயேபோய்விட்டார்.
விஜயகாந்த் என்றால் கம்பீரம் என்று சொல்லும் அளவுக்கு மிடுக்காக இருப்பார்.
அண்மையில் இதய அறுவைசிகிச்சை செய்ததினாலோ என்னவோ… விஜயகாந்த் அநியாயத்துக்கு தளர்ச்சியடைந்துவிட்டார்.
சுயமாக நடக்க முடியாத அளவுக்கு தள்ளாடுகிறார்.
இரண்டு பக்கமும் ஆட்கள் அவரை தாங்கிப்பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.
காற்றில் பறந்து… சுவற்றில் பறந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் விஜயகாந்தா இது?

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top