↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்ததாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி, லீக் சுற்றில் தோல்விகளை பெறாமல் அரையிறுதி வரை வந்தது. அதே போல் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கமும் அதிகமாக காணப்பட்டது.
இதனால் சிட்னியில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இதன் காரணமாக இந்தியா- அவுஸ்திரேலியா மோதிய போட்டியை மொத்தம் 635 மில்லியன் ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.
இது இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை பார்த்த ரசிகர்களை விட அதிகம்.
இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 288 மில்லியன் ரசிகர்கள்தான் ரசித்திருந்தனர்.
மேலும் இந்தியாவில் 63 கோடியே 50 லட்சம் பேர் இந்த போட்டியை பார்த்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இது ஒரு சாதனையாகும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top