↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad "மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்" என்ற இந்தி படத்தின் தலைப்பை மாற்றுவதாக பட நிறுவனம் தெரிவித்ததையடுத்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரம் தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, வழக்கில் தன்னையும் ஒரு மனு தாரராக சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், தனது பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பணம் பெற்றதாக கூறப்படும் புகார் பற்றி தெரியாது என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில், "மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்" படத்தின் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வர்ஷா புரொடக் ஷன் சார்பில் ஆஜனரான வழக்கறிஞர், ரஜினிகாந்த்தின் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்றும், படத்தின் பெயரை "மெய்ன் ஹூன் பார்ட் டைம் பில்லர்" என மாற்றுவதாகவும் கூறினார்.

ரஜினிகாந்த்- வர்ஷா புரொடக் ஷன் தரப்பில் சமரசம் ஏற்பட்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top