↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சமீபகாலமாக தனது ரசிகளுக்கு பல உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜய். அந்தவகையில் தினந்தோறும் உழைத்து சம்பாதிக்கும் மூன்று குடும்பங்களுக்கு விஜய் உதவி செய்துள்ளார்.

தற்போது அயனாவரம் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜேஷ், அண்ணா நகர் ஆர்ச் அருகில் வாடகை தள்ளுவண்டியில் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு சூப் கடை நடத்தி வந்தார். அவருக்கு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வழங்கியுள்ளார்.

கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள லட்சுமி நகரில் டிபன் கடை, இஸ்திரி கடையை திருமதி.ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வாங்கிக் கொடுத்தார்.


திருமதி.ஞானம்பிரகாசம் மகனுடன் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து வண்டியை பெற்றுக் கொண்டு சென்றார். இதே போல் நீலாங்கரை பகுதியில் பழம், இளநீர் வியாபாரம் செய்து வந்த முருகன் என்பவரின் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்

இது விஜய் கவனத்திற்கு சென்ற உடன் உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியையும் வாங்கி கொடுத்துள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top