
நடிகர் அஜித் தற்போது தன் 2 வது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் சிவா படத்துக்கு அடுத்த யார் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரின் ரசிகர் மனதில் எழுந்து உள்ளது.
ஆனால் அஜித்தை பொறுத்த வரை சிவா படத்தின் வேலைகள் தொடங்க உள்ள நேரத்தில் இன்னொரு படத்தை பற்றி பேச கூடாது என்ற கொள்கையை வைத்து இருப்பவர், இருந்தாலும் சமீபத்தில் இயக்குனர் கௌதமை சந்தித்துள்ளார்.
ஒரு பக்கம் கௌதமும் சிம்பு படத்தில் பிஸியாக இருக்கிறார். ஒரு சின்ன இடைவெளியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது .
என்னை அறிந்தால் 2ம் பாகம் கதை ரெடியாக உள்ளது, மிக விரைவில் அஜித்திடம் சொல்ல உள்ளேன் என்ற ஒரு பேட்டியில் கௌதம் தெரிவித்தார். இந்த சந்திப்பு மூலம் இவர் அஜித்துடன் மீண்டும் இணைய போகிறாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழும்பியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.