↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad விலை மாதுவை சரமாரியாக குத்தி கொன்று விட்டு உடலுறவு கொண்ட காமக்கொடூரனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள Falkirk நகரை சேர்ந்தவர் Steven Mathieson. இவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய மனைவி இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருக்க முடிவெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள விலை மாது ஒருவரை வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Luciana Maurer(23) என்ற விலை மாதுவும், அவருடன் இரண்டு பெண்களும் அவரது அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்துள்ளனர்.
மூன்று பேரும் பேசிக்கொண்டு இருக்கையில் திடீரென லூசியானாவை சரமாரியாக கத்தியால் ஸ்டீபன் தாக்கியுள்ளார். சுமார் 44 முறை கத்தியால் தாக்குதலுக்கு உள்ளான லூசியானா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை அருகில் வைத்துக்கொண்டு, லூசியானாவுடன் வந்த இரண்டு பெண்களை மிரட்டி, தாக்குதலுக்கு உள்ளாக்கி கொடூரமாக கற்பழித்தான்.
ஸ்டீபனின் காட்டுமிராண்டித்தனத்தை சமாளித்து இரண்டு பெண்கள், அவனிடமிருந்து மீண்டு நிர்வாணமாக வீட்டை விட்டு தப்பியுள்ளனர்.
ஸ்டீபனிடமிருந்து தப்பித்த பெண்கள் இருவரும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அனுப்ப, ஸ்டீபன் வீட்டிற்கு விரைந்த பொலிசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்டீபனின் வழக்கு இன்று Glasgow நீதிமன்றத்திற்கு வந்தது. தனது குற்றங்கள் அனைத்தையும் ஸ்டீபன் ஒப்புக்கொண்டதால், அவருக்கு தீர்ப்பு வழங்கும் திகதியை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Dave Pinkney, கொடூரமான குற்றங்களை செய்த ஸ்டீபனிற்கு தண்டனை உறுதியாகி விட்டதால், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு ஒருவித நிம்மதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top