↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பலவிதமான தடைகளை தகர்த்து நேற்று மாலை முதல் கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படம் ரிலீஸாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஊடகங்களும், ரசிகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பதாலும், வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்திருப்பதாலும், 'கொம்பன்' படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கார்த்தி தனது அடுத்த படங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

கார்த்தி தற்போது இ ரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் 'காஷ்மோரா' திரைப்படம். இந்த படம் குறித்து குறிப்பிட்ட கார்த்தி, 'தன்னுடைய படங்களிலேயே மிக அதிக பட்ஜெட்டை கொண்ட படம் 'காஷ்மோரா' படம்தான் என்றும், இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை குழந்தைகள் அதிகம் விரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது இருக்கும் பிசியில் இது சாத்தியமா? என்று தெரியவில்லை. மேலும் முதல்முறையாக கார்த்தியுடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் கார்த்தி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படமும் விரைவில் தொடங்கவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top