↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சந்தானம் ஹீரோவாகி விட்டதால், தற்போது விஜய், சூர்யா வரை எட்டிபிடித்து விட்டார் சூரி. அதோடு தற்போது சிங்கம்புலி, சிங்கம்முத்து, பாலசரவணன், சதீஷ் என பல காமெடியன்கள் களத்தில் இருந்தபோதும் அவர்களில் முதன்மையானவராக சூரிதான் இருக்கிறார். அவருக்கென்று ஒரு வியாபாரம் உள்ளதால் மார்க்கெட் இல்லாத இரண்டாம் தட்டு ஹீரோக்கள் பலர் சூரியை நம்பித்தான் உள்ளனர். அதோடு, சில ஹீரோக்கள் தங்களை விட அவர் அதிகமான காட்சிகளில் வந்து, அதிகமான டயலாக் பேசினால்தான் எடுபடும் என்பதால் தாங்களாகவே அவருக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கின்றனர்.

விளைவு, இப்போது மார்க்கெட் இருக்கிற ஹீரோக்களின் படங்களில் நடிக்கும்போதும் அவர்களை ஓவர்டேக் செய்யும் வகையில் நடிக்கிறாராம் சூரி. அதன்காரணமாக, டைரக்டர்கள் தனக்கு சரியான டயலாக் கொடுக்காதபோதும், தனக்கான டயலாக்குகளை தானே அதிகப்படியாக சேர்த்துக்கொண்டு நடிக்கிறாராம் சூரி. இதனால் இரண்டு பிரபல ஹீரோக்கள் சூரி மீது அதிருப்தியில் இருப்பதோடு தங்களது அடுத்தடுத்த படங்களில் அவருக்கு கல்தா கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top