பின்னர் இலங்கை அரசு, உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணியை அழைத்துச் செல்ல லாகூருக்கு சிறப்பு விமானத்தை அனுப்பியிருந்தது. அந்த விமானத்தை ஓட்டி வந்த பைலட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் வெட்டிமுனி ஆவார்.
சுனில் வெட்டிமுனி, 1975 மற்றும் 1979 ஆகிய இரு உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியவர்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வெட்டிமுனி, அப்போதைய இலங்கை அணியில் பிரலமானவர். பின்னர் பைலட் ஆகி விட்டார்.
கடந்த 1979ம் ஆண்டு அப்போதைய குட்டி அணியான இலங்கை, இந்தியாவை தோற்கடித்து அனைவரையும் மிரள வைத்திருந்தது.
அந்தப் போட்டியில் இலங்கை அணியில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்தவர் வெட்டிமுனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளை வைத்து `சுவம் பால்’ என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் இந்த சுவாரஸ்யமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.