↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமான நிழலுலக தாதாவாக செயல்பட்ட பப்லு ஸ்ரீவச்தவா தற்போது உத்தரபிரதேச சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடைய வாழ்க்கையில் நடந்த திடுக்கிடும் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு இந்தி படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் அர்ஷத் வர்சி முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க சினேகா உல்லல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை பக்கத்து வீட்டு பெண்ணை போன்ற துறுதுறு வேடங்களில் நடித்து கொண்டிருந்த சினேகா உல்லல், முதன்முதலாக உண்மைக்கதையை தழுவி எடுக்கப்படும் ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். 

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, தான் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் ஜாலியானது என்றும் முதன்முதலில் சீரியஸான ஆக்சன் கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருப்பது குறித்து நினைத்து பார்க்கும்போது த்ரில்லாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்தியில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு 'பப்லு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top