இந்நிலையில் இன்று சென்னையின் முக்கியமான திரையரங்கு ஒன்றில் முன்பதிவு புக்கிங் ஆரம்பித்தது. முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் 4 நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டது. அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு புக் செய்து வருகின்றனர். மேலும், குண்டு வைப்போம் என்று மிரட்டல் கடிதம் வந்தது அந்த தியேட்டருக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முன்னோட்டம் வருமாறு:-
‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை, ஒரு மனிதனின் வாழ்க்கை பயணம் என்று சொல்லலாம். அஜித்குமார் பல தோற்றங்களில் நடித்து இருக்கிறார். படத்தில், நிறைய ‘பஞ்ச்’ வசனங்கள் உள்ளன.
முதலில் கதாபாத்திரங்களாக அஜித், சத்யதேவ், சத்யா என இரண்டு கெட்டப்பில் வருகிறார். அதேபோல் த்ரிஷா ஒரு நடனக்கலைஞராக ஹேமானிகா என்ற பெயரில் அஜித்தின் ஜோடியாகவும், அனுஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக தேன் மொழி என்ற கதாபாத்திரத்தில் அஜித்தை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் வருகிறார்.
இதில் விவேக் அஜித்தின் நண்பராக படம் முழுவதும் நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரத்தில் வருவாராம். மேலும், படத்தில் மிக முக்கியமாக விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் வில்லனாக கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதையாக பார்த்தால், தன் மகன்(அஜித்) ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படும் தாய், அவன் என்ன ஆகிறான், அவன் வாழ் நாளில் யாரையெல்லாம் சந்திக்கிறான், எந்த மாதிரி பிரச்சனைகளை எதிர் கொள்கிறான் என 25 வயது முதல் 40 வயது வரையிலான ஒரு இளைஞனின் கதை தான் இந்த என்னை அறிந்தால்.
புதுவருடம் அன்று ’என்னை அறிந்தால்' படத்தின் பாடல்கள் வெளியாகியது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பயங்கர ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இனி நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது படத்தின் பின்னணி இசை தான். மேலும், ‘ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா, இந்திப்பட உலகின் கதாசிரியர், இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் படத்தில் பணியாற்றியது படத்திற்கு மேலும் பலம். கண்டிப்பாக என்னை அறிந்தால் ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் அமையப்போகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.