↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடந்த 2 வருடங்களாகவே அஞ்சலி பற்றிய சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சித்தியுடன் தகராறு, இயக்குனர் களஞ்சியத்துடன் மோதல், காதலனுடன் ஓட்டம், பப்பில் குடித்துவிட்டு கலாட்டா என பல்வேறு பரபரப்புகள் அவரை பின்தொடர்கின்றன. ஏதாவது ஒரு பிரச்னைக்கு பதில் அளித்தால் அதற்குள் மற்றொரு பிரச்னை சூழந்துகொள்வதாக நினைப்பதுடன் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் தன்னைப்பற்றி தவறான எண்ணம் வருவதாகவும் உணர்கிறார்.
இதிலிருந்து விடுபடுவதற்கான வழியை இணைய தள மூலம் தேடிக்கொண்டிருக்கிறார். திடீரென்று அவர் இணைய தள டுவிட்டர் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கி இருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக தகவல்களை டுவிட் செய்யும்படி கேட்டுக்கொண்டிருப்பதுடன் உடனுக்குடன் தன்னைப்பற்றிய தகவல்களை வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார். அதில் அவரை பற்றி பரவும் கிசு கிசுக்களுக்கு உடனே பதில் தருவாராம்.
0 comments:
Post a Comment