
சிசிஎல்-5ல் சென்னை ரைனோஸ் மற்றும் தெலுங்கு வாரியர்ஸ் அணி இன்று பைனலில் பலப்பரிட்சை நடத்தியது. இதுவரை தோல்வியை பார்த்திராத சென்னை அணி முதலில் பேட்டிங் இறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தொடங்கியது.
சென்னை அணியின் ஸ்டார் வீரர்களான ரமணா, விக்ராந்த், விஷ்ணு அனைவரும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 100 ரன்னை தொடுமா என்று நிலை வந்துவிட்டது.
ப்ரித்வி மற்றும் அணி தலைவர் ஜீவாவும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 132 ரன் சேர்த்தது.
இதன் பிறகு களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் அணி ஆரம்பமே அதிரடியை காட்டியது. 50 ரன் தாண்டிய பிறகே சென்னை அணி முதல் விக்கெட்டை எடுத்தது. ஆனால், தெலுங்கு அணியின் அதிரடி ஆட்டத்தில் 18.1 ஓவரில் வெற்றி இலக்கை எளிதில் எட்டியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.