↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad திரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண்மணியனுக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வருகிற மார்ச் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

திருமணத்தையொட்டி சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள திரிஷா, தமிழ் படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று, தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 

ஆனால், திரிஷா இதுவரையிலும் திகில் படங்கள் எதிலும் நடித்ததில்லை. திகில் படங்களை கண்டாலே திரிஷாவுக்கு பயம் என்றும், ஆகையால் இனிவரும் காலங்களில்கூட திகில் படங்களில் நடிக்கமாட்டார் என்றும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. 

இதற்கு திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, திகில் படங்களில் நடிக்கமாட்டேன் என்று நான் கூறவில்லை. திகில் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான். அது போன்ற படங்களில் நானும் ஒரு பகுதியாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’ ஆகிய படங்களும் விரைவில் வெளிவரவிருக்கின்றன


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top