↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உத்தரப்பிரதேசத்தில் 16 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டில் பந்து தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அனுராக் என்ற வீரர் பவுன்சர் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்தார். எகிறிய பந்து அவரின் கழுத்தில் பலமாக தாக்கியது.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதே போல கடந்த வாரம் 25ம் திகதி பவுன்சர் பந்து தாக்கியதில் 18 வயதான பாகிஸ்தான் வீரர் ஜீசான் முகமது மற்றும் டிசம்பர் 28ம் திகதி இளம் வீரர் ராம் சந்திர ரான்கிட் சுதார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top