↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடைசியில விஜய் சேதுபதியை மூணு ஹீரோக்களில் ஒருத்தராக்கிட்டாங்க. இனிமேல் எந்தப் படத்திலும் கௌரவ வேடத்தில் தலை காட்ட மாட்டேன். இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க மாட்டேன். என்றெல்லாம் அதிரடியாக அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் இப்போது அவரை மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வைக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா, ஜிகர்தாண்டா படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இறைவி என்ற படத்தை இயக்கவிருக்கிறார். 

எஸ்.ஜெ. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகிய மூவரும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாம். இவர்களுடன் கருணாகரன் துணை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டு ஹீரோக்கள் படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த விஜய் சேதுபதி, தனக்கு பீட்சா படத்தின் மூலம் நல்ல பிரேக் கொடுத்ததால் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க ஒத்துக் கொண்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top