↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 11வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் இருந்து மேந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களான பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 11ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அந்த அணியின் விபரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் முன்னாள் அணித்தலைவர் வெய்ன் பிராவோ மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் இடம் பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும், வீரர்கள் சங்க முன்னாள் தலைவருமான ராம் நரைன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த தகவலை தெரிவித்தது யார் என்பதை வெளியிட மறுத்துள்ள ராம் நரைன், இது உண்மையான தகவல் என்றும் கூறியுள்ளார்
ராம் நரைன் வெளியிட்டுள்ள தகவல் குறித்து மேற்கிந்திய திவுகள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதற்கு அதனை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை.
கடந்த அக்டோபர் மாதம் சம்பள பிரச்சினை காரணமாக வெய்ன் பிராவோ தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய தொடரை பாதியில் ரத்து செய்தது பலத்த சர்ச்சையை கிளப்பியது.
இந்த சம்பவம் எதிரொலியாக அவரிடம் இருந்து அணித்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top