பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள அல்கொய்தா தீவிரவாதிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா அழித்து வருகிறது.
முதலில் தீவிரவாதிகளின் இடத்தை விமானங்கள் கண்டுபிடிக்கின்றன, பின்பு இவற்றில் உள்ள அல்ட்ரா கமெராக்களின் மூலம் மனித வெப்பத்தை அறிந்து கொண்டு தாக்குதல் நடத்துகின்றன.
எனவே ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள புதிய யுக்தியை அல்கொய்தா பின்பற்றி வருகிறது.
அதாவது, அலுமினியத்தால் ஆன ஷீட்டை கொண்டு தங்களை மூடிக் கொள்கின்றனர், இதனால் ஆளில்லா விமானங்களால் மனித வெப்பத்தை உணர முடிவதில்லை.
இந்த முறையை தங்கள் அமைப்பில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் இந்த யுக்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது, எனவே இதற்கான மாற்றுவழியை யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.