↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘விஜய் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை எஸ்.கே.டி ஸ்டுடியோஸ் சார்பில் பி.டி.செல்வகுமார்,
சிபு தமீன் தயாரிக்கின்றனர். பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து, கேமரா ’நட்டி’ என்கிற நடராஜ் சுப்பிரமணியன், படத்தொகுப்பு ஸ்ரீகர்பிரசாத், கலை இயக்கம் ஐ பட ஆர்ட் டைரக்டர் டி.முத்துராஜ் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடனம் ராஜூ சுந்தரம். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீதேவி, சுதீப், பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். விஜயகுமார், தம்பிராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன், நரேன், ஜோமல்லூரி, அஜய் ரத்தினம் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய காலகட்டம் என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நிகழ்கிறது. சரித்திர பின்னணியில் நடைபெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறதாம். இதில் மூன்று பாடல்களை பதிவு செய்து விட்டாராம் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்! இதில் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்காக சென்னை, ஈ.சி.ஆர்.பகுதியில் பிரம்மாண்டமான அரண்மனை செட் அமைத்து அதில் பல காட்சிகளை படம் பிடித்துள்ள சிம்பு தேவன், விஜய் – ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் அந்த செட்டிலேயே படமாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ‘விஜய் 58′-ன் படப்பிடிப்பு ஈ.சி.ஆர். பகுதியை தொடர்ந்து தலைக்கோணத்தில் நடைபெறவிருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வரவிருப்பதாக ஒளிப்பதிவாளர் நடராஜ் அறிவித்துள்ளார்.
மேலும் விஜய் நடித்த படங்களில் இப்படி ஒரு சரித்திரக் காலக் கதை வந்ததில்லை. அதேபோல முந்தைய படமான கத்தியும் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து விட்டதால் இப்படத்தை வாங்க வழக்கத்தை விட விநியோகதர்கள் மத்தியில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்றும், அதற்குள் விஜய் 58 படத்தின் வெளியீட்டு உரிமை விற்பனையாகத் தொடங்கி விட்டது என்றும், இந்த ரேஸில் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியாக்களின் உரிமைகளை மறைந்த இயக்குனர் ராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அவரது மகன் முரளி ராமநாராயணன் வாங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விஜய் படத்தின் தலைப்பை வைத்து பலர் பல விதமாக கருத்துகளை பேசிவருகின்றனர், சிலர் படத்திற்கு தடை போட வேண்டும் என துடிக்கின்றனர்.இதையெல்லாம் பார்த்து யோசித்த விஜய் நம்ம படத்திற்கு வேறயதாவது தலைப்பை வைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.
அதனால் புலி என்ற தலைப்பிற்கு பதில் வேற டைட்டிலை வரும் பொங்கல் அன்று அறிவிக்கவுள்ளனர் என கோலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. தலைவாவில் ஆரம்பித்த இந்த பிரச்சனை தொன்று தொட்டு வருவதால், இந்த படத்தையாவது பிரச்சனை இல்லாமல் வெளியிட வேண்டும் என்பதில் இளைய தளபதி விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top