எதிர்கால சந்ததியினரை கவனத்திற்கொண்டு செயற்படுவோம். நாட்டு மக்களுக்கு கொடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தினை நிறைவேற்றுவேன். அத்தோடு மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையின் 6வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அவர், தனது கன்னி உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும்.
என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் இந்த நடவடிக்கையில், ஊழல் மோசடிகளை ஒழித்து, நாட்டுக்காக பாடுபடும் அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும்.
என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் இந்த நடவடிக்கையில், ஊழல் மோசடிகளை ஒழித்து, நாட்டுக்காக பாடுபடும் அரசியல் தலைமைகளை உருவாக்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.




0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.