↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லிங்கா படம் ஹிட்டா? ப்ளாப்பா? என்று எத்தனை பட்டிமன்றம் வைத்தாலும் தெரியாது போல. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் பெரு நகரங்களான திருச்சி, திருநெல்வேலி விநியோகஸ்தர்கள் பேட்டியளித்துள்ளனர்.
இதில் அவர்கள் கூறுகையில் ‘லிங்கா படத்தை 10 படையப்பா என்று சொல்லி எங்களிடம் விற்றுவிட்டார்கள். இது ஒரு வகையில் ஈமு கோழி வகை மோசடி தான்.
ஆனால், படத்திற்கு முதல் நாளே கூட்டம் வரவில்லை, எப்படியோ தயாரிப்பாளர்களுக்கு மட்டும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. இந்த லாபத்தில் சிறு தொகையை தான் நாங்கள் கேட்கிறோம். அதையும் தர மறுத்தால் நாங்கள் என்ன செய்வது?.
மேலும் ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லவே உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறோம். அவரே நேரடியாக வந்து பதில் சொன்னால் தான் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்’ என்று கூறியுள்ளனர்.
லிங்கா லாபம் தான், ஆனால் மோசடி நடந்துவிட்டது! புலம்பும் விநியோகஸ்தர்கள் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top