லிங்கா படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி விநியோகஸ்தர்கள் இன்று ஒரு நாள் அடையாளமாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த உண்ணாவிரததுக்கு தலைவராக மன்சூர் அலிகான் பங்கு கொண்டார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், இங்க எல்லாத்தையும் சம்பாதிக்றாங்க, அப்புறம் கொட்றதெல்லாம் கர்நாடகாவில் கொண்டு போய் கொட்றாங்க, ஆந்திராவில் கொட்றாங்க, ஆனால் அழுவதற்கு மட்டும் தமிழ்நாடு வேணும் என்று கூறியுள்ளார்.
அதோடு லிங்கா படத்தின் தயாரிப்பாளரை பற்றிய விவரம் தயாரிப்பாளர் சங்க விவரங்களில் இல்லாத போது எப்படி ரஜினி கால்ஷீட் கொடுத்தார் என மேடையில் வெளுத்து வாங்கிவிட்டார் மன்சூர் அலிகான்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.