↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad டெல்லி: கறுப்பு பண விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளி உலகிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா மேலும் கூறியதாவது: கறுப்பு பண மீட்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்துள்ளார். கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தடையாக உள்ளன. மேலும் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. 

இத்தனை சிக்கல்களை தாண்டியும், கறுப்பு பணம் பதுக்கிய 700 பேர்களையும், கறுப்பு பண மீட்பு தொடர்பான சிறப்பு விசாரணை குழுவிடம் அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top