கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த படம் லிங்கா. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல விநியோகஸ்தர்களை நஷ்டத்தை தள்ளியுள்ளது.
அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில், தஞ்சையை சேர்ந்த விநியோகஸ்தர்கள் லிங்கா படம் ரூ. 20 கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக புகார் கொடுத்திருந்தனர்.
ஆனால் இந்த நஷ்டம் சம்பந்தமாக இதுவரை லிங்கா பட நிறுவனமோ, ரஜினி தரப்போ இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.
எனவே சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமாக விநியோகஸ்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.