↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad 80, 90களில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘49 ஓ' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்து சுசீந்திரன் உதவி யாளர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தில் நடிக்கிறார். 

இதுபற்றி இயக்குனர் கூறும்போது,‘3 மாதமாக கவுண்டமணி சாரிடம் கதை சொல்ல அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். 49 ஓ பட ஒளிப்பதிவாளர் கருப்பையா அறிமுகம் செய்துவைத்ததற்கு பிறகு கதை கேட்டார். இதில் பட ஷூட்டிங்கில் நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் கேரவன் வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் அதிபர் வேடம் ஏற்கிறார். கதையை கேட்டதும், ‘எனக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் துணை நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களுக்கும் நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறாய். இதுபோன்ற படம்தான் ஜெயிக்கும். இப்படம் வெற்றி பெறும்' என்றார். 

சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்யங்களே கதை. அடுத்த மாதம் ஷூட்டிங். ஜெ.சண்முகம் தயாரிக்கிறார். மற்ற நட்சத்திர தேர்வு நடக்கிறது' என்றார்.

 துணை நடிகர்கள் இன்றி வெற்றிபெற முடியாது - கவுண்டமணி தடாலடி

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top