↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் படம் ‘சாகசம்’. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் நாயகன் பிரசாந்த். இசை தமன். சமீபத்தில் இந்தப் படத்துக்காக ‘யார் இவள் யார் இவள் என்னாச்சி, என்னமோ ஏதோ ஆயாச்சி, ஓ மது மது, மை மது மை மது’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ‘யூத் ஐகான்’ அனிருத். அந்தப் பாடல் உருவான கதையை தியாக ராஜனிடம் கேட்டோம்.

‘‘ஹீரோ, ஹீரோயினை முதன் முறையாக சந்திக்கும்போது காதல் பிறக்கிறது. ஹீரோயின் பெயர் தெரியாத நிலையில் மது என்று யூகித்து ஹீரோ பாடுவதுதான் சிச்சுவேஷன். துள்ளலான இந்தப் பாடலைப் பாடுவதற்கு நிறையப் பேர் பரிசீலிக்கப் பட்டது.

இதே படத்தில் ஷங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, லட்சுமி மேனன் என பல பிரபலங்கள் பாடியுள்ளார்கள். அந்த சமயத்தில்தான் ஒட்டுமொத்த டீமும் அனிருத்தை பாடவைக்கலாம் என்றார்கள். அவரும் மின்னல் வேகத்தில் வந்து பாடிக் கொடுத்தார். பாடலும் செம ரகளையாக வந்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் இன்னொரு ‘கொலவெறி’ என்று சொல்லலாம்’’.

  கொலவெறி பார்ட் 2

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top