↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பொங்கலுக்கு இவ்வளவு படங்கள் வருதே, எப்படிடா? என்று உயிர் நண்பன் ஆர்யா கேட்க,  எவனாயிருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால் பதிலளிக்க, அதை அப்படியே ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கொட்டிவிட்டார் ஆர்யா.
அதே பொங்கலுக்கு ‘என்னை அறிந்தால்’ திரைக்கு வருவதாக இருந்ததல்லவா? அஜீத் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள் பொங்கி. எங்க தலய வெட்டுவேன்னு சொல்ற அளவுக்கு தைரியம் வந்துருச்சா என்று காட்டுப்பிடி பிடித்தார்கள் விஷாலை. ட்விட்டர் பேஸ்புக் என்று எல்லா இடத்திலும் விஷாலுக்கு அர்ச்சனை. நல்லவேளை... ரூட்ல டிராபிக் க்ளியர். என்னை அறிந்தால் பொங்கலுக்கு வரவில்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். ஐ மட்டும்தான் ஒரே போட்டி. இது நல்ல விஷயம்தான் என்றாலும் அதற்காக விஷால் அலட்டிக் கொள்ள வேண்டுமே? எப்பவும் போல ஆர்ப்பாட்டம் காட்டுவதில்லை! மனசுக்குள் இருக்கிற சந்தோஷத்தை வெளியில் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் நேரம் நல்லாயிருந்தா நெல் விதையில கூட மரம் முளைக்கும் என்பதற்கு விஷாலின் நல்ல நேரம்தான் சாட்சி

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top