↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நடிகை ராய்லட்சுமி சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது அங்கு 13000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த அனுபவம் தனக்கு புதுமையாக இருந்தது என்றும் இப்பொழுதுகூட பறந்து கொண்டிருப்பதுபோல ஒரு உணர்வு தனக்கு இருப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனக்கு சிறுவயது முதலே ஸ்கைடைவிங் செய்வது விருப்பம் என்றும் சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது ஸ்கை டைவிங் நிபுணர் ஒருவருடன் சேர்ந்து  13000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்ததாகவும், அந்த நேரத்தில் தனது கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்றும் கூறினார். இந்த சம்பவம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாறிவிட்டது.

நடிகை ராய்லட்சுமி தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி 3 மற்றும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top