↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த 2014ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள திரைப்படம் என்றால் அது "பெங்களூர் டேய்ஸ்" என்ற திரைப்படம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அந்த படத்தின் கேரக்டர்களான மீனாட்சி, சாரா, திவ்யா மற்றும் கிருஷ்ணன் ஆகியவைகளை கேரளாவில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என கூறலாம். அந்த அளவிற்கு இந்த கேரக்டர்கள் புகழ்பெற்றவை.

இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் கோபி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நமீதா பிரமோத் அவர்களிடம் மேற்கண்ட கேரக்டர்கள் உள்ள திரைப்படம் எது என்று கேட்டார். 

இந்த கேள்விக்கு நடிகை நமீதா கொஞ்சம் கூட யோசிக்காமல் 'பட்டம் போல்' என்று பதிலளித்துள்ளார். பின்னர் சுரேஷ் கோபி எச்சரிக்கை செய்ததால் ஆடியன்ஸ் உதவியுடன் "பெங்களூர் டேய்ஸ்" என்ற சரியான பதிலை கூறி பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் நடிகை நமீதாவை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை அலியா பட், இந்தியாவின் ஜனாதிபதி பிரித்விராஜ் சவான் என்று கூறியதையும், நமீதாவின் பதிலையும் ஒப்பிட்டு கலாய்த்து வருவதால் சமூக வலைத்தளம் பெரும் பரபரப்புடன் உள்ளது.
 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top