↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய வீரர்களை சீண்டி வரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் தனது முதல் ஓவரிலே முக்கிய விக்கெட்டான முரளி விஜய்யை வீழ்த்தினார்.
டக்-அவுட் ஆக வெளியேறிய விஜய்யை பார்த்து ஆக்ரோஷமாக கத்தியபடி அவரை வெறுப்பேற்றினார். ஸ்டார்க்கின் இந்த செயல் வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும்.
இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அவரை கடுமையாக எச்சரித்துள்ளது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எச்சரிக்கையோடு தப்பினார்.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு அவர் அஸ்வினை பார்த்து தேவையில்லாமல் முனுமுனுத்தார். இதற்கு அஸ்வினும் பதிலடியாக வாக்குவாதம் செய்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top