↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிசயிக்கத்தக்க மனிதர் என்று பொலிவூட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக வந்த அவர் ஆங்கில இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் நேற்று இலங்கையின் கலைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம் மும்பாயில் இருந்து வந்துள்ளமையால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறியமுற்படவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

தமது விஜயம் அரசியலுடன் தொடர்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ள சல்மான்கான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தாம் சந்தித்த மனிதர்களில் மஹிந்த ராஜபக்ச மிகவும் பணிவான மனிதராகும்.
அத்துடன் மனிதாபிமானமுள்ள மனிதராகும் என்றும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top