↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மனைவிகள் அங்கு செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் காதலிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்னும் அமலில் உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் கிரிக்கெட் வீரர்களுடன் காதலிகள் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அணி வீரர்களை ஊக்குவிக்க அவர்களின் மனைவிகள் ஆஸ்திரேலியா செல்ல கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் காதலிகள் செல்ல அனுமதி கிடையாது.

இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று கூறி தனது காதலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை விராத் கோஹ்லி அழைத்துச் சென்றார். தற்போது அனுஷ்கா ஆஸ்திரேலியா சென்று கோஹ்லியுடன் இருக்க முடியாது. கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவையடுத்து டோணி, ஷிகார் தவான், முரளி விஜய், பூஜாரா, அஸ்வின், உமேஷ் யாதவ் உள்ளிட்டோரின் மனைவிகள் விரைவில் மெல்போர்ன் செல்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி திண்டாடி வரும் வேளையில் அணி வீரர்களின் மனைவிகள் அங்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top