↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள கர்நாடக மாநிலம் கல்யாணைச் சேர்ந்த ஆரீப் மஜீதுக்கு எதிரான ஆதாரங்களை தேசிய புலனாய்வு மையம் திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் உதவியது தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான வஹாபி அறிஞர்கள் இந்தியா வந்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் அறிஞர்கள் இந்தியா வந்துள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இந்தியா வந்து போதனை செய்ததுடன் இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி உள்ளிட்ட பல என்.ஜி.ஓ.க்கள் வாலிபர்கள் வெளிநாடு சென்று ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட போராட உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்பு 
இணையதளத்தில் பார்த்த பல வகை செய்திகள் தான் ஆரீப் மஜீதை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர தூண்டியுள்ளது. ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் போர்க்களத்தை எப்படி அணுகுவது என்று மஜீத் ஆன்லைனில் ஒருவரிடம் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் வரை பதில் வரவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அவரை தானேவில் உள்ள நபர் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு பதில் வந்துள்ளது. 

இதற்கிடையே மஜீத் ஃபயாஸ் கான் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த கான் தான் மஜீதை இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த என்.ஜி.ஓ. மஜீத் ஈராக் செல்ல பணம் அளித்ததுடன், அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மஜீதை மும்பையில் இருக்கும் ஷஹீன் டிராவல்ஸுக்கு சென்று டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். 

மஜீத் உள்ளிட்ட சிலர் கர்பலாவுக்கு புனித யாத்திரை செல்வது போன்று சென்று அங்கிருந்து மொசுல் நகருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று ஒன்இந்தியா ஏற்கனவே செய்தி வெளியிட்டது. மஜீத் ஈராக்கில் அபு பாத்திமா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி: 
இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி என்கிற என்.ஜி.ஓ. புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. அந்த என்.ஜி.ஓ.வில் சுமார் 30 பேர் உள்ளனர். அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வஹாபி அறிஞர்கள் இந்தியா வந்து இளைஞர்களுக்கு போதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். உலகில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதே வஹாபி அறிஞர்களின் முக்கிய குறிக்கோள். 

இந்த குறிக்கோளை போரிடுவதன் மூலமே அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தானேவில் உள்ள மும்ப்ரா, பிவாண்டி மற்றும் கல்யாணில் அந்த என்.ஜி.ஓ. இது குறித்த பல கூட்டங்களை நடத்தியுள்ளது. அங்கு வரும் இஸ்லாமிய இளைஞர்களிடம் விரைவில் பேரழிவை சந்திக்கத் தயாராக இருங்கள். அந்தப் பேரழிவை நாம் தான் உருவாக்கப் போகிறோம். இந்தியா மீது போர் தொடுப்பதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்று போதனை செய்துள்ளனர்.

என்.ஜி.ஓ.க்கள் 
சில என்.ஜி.ஓ.க்கள் வழிதவறிய வாலிபர்களுக்கு உதவி செய்வதாக தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. தீவிரவாத அமைப்பில் சேர்பவர்களை விட அவர்கள் சேர உதவி செய்யும் ஆட்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top