இலங்கை அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே சீமான், வைகோ, நெடுமாறன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் மைத்ரிபாலா சிறீசேனாவும் நேற்று சல்மான்கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இந்திய சினிமா பிரபலங்களை பிரச்சாரத்திற்கு அழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நடிகராக இருந்து பின்னர் அரசியலில் குதித்துள்ள ரஞ்சன் ராமாநாயகே, சல்மான் கான் பிரச்சாரம் குறித்து கூறியதாவது, “சல்மான், நீங்கள் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். உங்கள் படங்களை இலங்கையில் உள்ள அனனத்து கட்சி தொண்டர்களும் ரசித்து பார்க்கின்றனர். நானும்கூட உங்கள் ரசிகன் தான். எனவே தயவு செய்து ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களை நீங்கள் விற்க வேண்டாம். தயவு செய்து இந்தியாவிற்குத் திரும்பிப் போய்விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இலங்கையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சல்மான்கான் ராஜபக்சேவை ஒரு அற்புதமான மனிதர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். அவருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும் இலங்கையில் நடிகராக இருந்து பின்னர் அரசியலில் குதித்துள்ள ரஞ்சன் ராமாநாயகே, சல்மான் கான் பிரச்சாரம் குறித்து கூறியதாவது, “சல்மான், நீங்கள் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். உங்கள் படங்களை இலங்கையில் உள்ள அனனத்து கட்சி தொண்டர்களும் ரசித்து பார்க்கின்றனர். நானும்கூட உங்கள் ரசிகன் தான். எனவே தயவு செய்து ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களை நீங்கள் விற்க வேண்டாம். தயவு செய்து இந்தியாவிற்குத் திரும்பிப் போய்விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இலங்கையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சல்மான்கான் ராஜபக்சேவை ஒரு அற்புதமான மனிதர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். அவருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.