↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  நான் ஏமாற்றப்பட்டேன் : செல்வராகவன் புகார்

சிறு இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்கும் செல்வராகவன், தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:சமீபகாலமாக வரும் தமிழ் படங்களில் கதைகள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன. திரையுலகம் முற்றிலும் மாறுபட்ட பாதைக்கு சென்றிருக்கிறது. எந்தவித கருத்தும் கிடையாது. ‘இரண்டாம் உலகம்‘ படத்தை இயக்கியபோது நான் ஏமாற்றப்பட்டேன். பலர் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. படத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அளவு தரப்படவில்லை. தேவையான சுதந்திரமும் தரப்படவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்த பாணியிலான படம் செய்தது தவறு என்று இப்போது உணர்கிறேன். நல்ல படம் இயக்குவதற்கான தருணம் வந்திருக்கிறது. அது விரைவில் நடக்கும் என்றார்.அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன். இதற்கிடையில் மற்றொரு டைரக்டரும் சிம்புவை இயக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார். இவர்கள் இருவரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதில் சிம்பு குழப்பத்தில் இருக்கிறார். ஏற்கனவே திரைக்கு வராமல் நீண்ட நாட்களாக காத்திருக்கும் இது நம்ம ஆளு, வாலு படங்களின் ரிலீஸ் விஷயத்திலும் சிம்பு கவனம் செலுத்தி வருவதால் முதலில் அந்த படங்களின் ரிலீஸை இறுதி செய்துவிட்டு அடுத்த படம் பற்றி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top